Thursday, September 19, 2013
காதல் ஆத்திச்சுவடி
'அ'ன்பே...
'ஆ'ருயிரே...
'இ'னிப்பாய் நீ...
'ஈ'யாய் நான்...
'உ'ன்னை தொடர்ந்து...
'ஊ'ரைச் சுற்றினேன்...
'எ'ன்னை நீயோ...
'ஏ'மாற்றினாய்...
'ஐ'ய்யகோ...!
'ஒ'ன்றும் புரியாமல்...
'ஓ'டிக்கொண்டு இருக்கிறேன்...-நீ அடுத்தவன்
'ஔ'ஸ்வைப் ஆனதால்...
'ஃ'ங்கேங்கேங்கேங்கே...
டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....
"நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"
பையன் சொன்னான்,
"மக்கள் தொகை பெருக்கம்"
"அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,
பையன் சொன்னான்,
"வேலை இல்லா திண்டாட்டம்"
கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,
''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.
அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,
''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''
கடன் வாங்கினவன் சொன்னான்,
''இதென்ன பெரிய அவமானம்?
இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
- Boopathy Murugesh
Share |
Show commentsOpen link